Wednesday, April 1, 2009

வெறுமை

சண்டைகளும் சச்சரவுகளும்
மெலிந்து ....
ஆர்ப்பரித்தலும்ஆரவாரங்களும்
நிறைந்திருந்த
அறைகளில் ...
இன்று...
மின்விளக்குகளையும் மின்விசிறிகளையும்
பேச விட்டிருக்கிறேன்...
தோழிகள் அங்கே இல்லாவிடிலும்
இருப்பதாய்
தோற்றபிழை உருவாக்கும்
எனைப் பார்த்து
மௌனமாய்
எள்ளி நகையாடுகிறது
வெறுமை..!!!!??

4 comments:

  1. மிக அருமை... குறிப்பாக
    //தோற்றபிழை
    நல்ல வார்த்தைப் பிரயோகம்..
    தோற்றப்பிழை என்றிருந்திருக்களாம்...

    ReplyDelete
  2. ஜானு மா :) அருமை .....

    வெறுமையும் உன் நினைவுகளில்
    அழகாக நிரம்பி சிரிக்கிறதே :) :) :) :) :)

    ReplyDelete
  3. நன்றி பார்த்திபன் .... அச்சடிக்கும் போது தவறு நிகழ்ந்து விட்டது....

    ReplyDelete
  4. நன்றி நிவே .... வெறுமை சிரித்ததோ இல்லையோ அழகான கவிதை ஒன்றை தந்திருக்கிறது ...:):)

    ReplyDelete